நானோ ஆப்பிள் நீதான் நியூட்டன் அடி பெண்ணே ஒ பெண்ணே ....புவியீர்ப்பால் என்னை கவர்ந்தாயோ இல்லை புயலான உன் விழியால் என்னை கவர்ந்தாயோ
சொல்லடி என் நியூட்டன் பெண்ணே ஒ பெண்ணே ........
என்னை வைத்து மூன்று விதி எழுதடி கண்ணே
நீ எழுதும் விதிக்கு இசை அமைக்க துடிக்குமடி என் இதயம் ........
பார்த்தால் பசி தீரும் என்பார்கள்!
பெண்ணே அடி போடி உன்னை பார்க்க பார்க்க பசிக்குதடி ......
தொட்டாசினுங்கி பார்த்ததுண்டோ அடி பாரடி நான் தொடாமல் சினுங்குகிறேன்
உன் பார்வையால் உன் பார்வையால் ....
- சுகந்தன்