Tuesday, November 8, 2011

Saturday, April 30, 2011

புரியுது !!!


வார்தையால் தெரியவில்லை என்றாலும்

உன் அழுகையால் புரியவைத்துவிடுகிறாய்....

மழலை மொழி




கல் தோன்றி மண் தோன்றி
பலமொழி இருந்திருக்கலாம்
உண்மொழியே அணைதிலும் முதன்மையாய்
அதிலும் அழகான தாய் மொழியாம் தமிழில்
நீ சொல்லமுயன்ற வார்த்தைகள் என்ன!
செல்ல மொழியோ !!!
மழலை மொழியோ !!!

Tuesday, January 4, 2011

Tapsee

நானோ ஆப்பிள் நீதான் நியூட்டன் அடி பெண்ணே ஒ பெண்ணே ....

புவியீர்ப்பால் என்னை கவர்ந்தாயோ இல்லை புயலான உன் விழியால் என்னை கவர்ந்தாயோ

சொல்லடி என் நியூட்டன் பெண்ணே ஒ பெண்ணே ........

என்னை வைத்து மூன்று விதி எழுதடி கண்ணே

நீ எழுதும் விதிக்கு இசை அமைக்க துடிக்குமடி என் இதயம் ........



பார்த்தால் பசி தீரும் என்பார்கள்!

பெண்ணே அடி போடி உன்னை பார்க்க பார்க்க பசிக்குதடி ......



தொட்டாசினுங்கி பார்த்ததுண்டோ அடி பாரடி நான் தொடாமல் சினுங்குகிறேன்

உன் பார்வையால் உன் பார்வையால் ....

- சுகந்தன்

Wednesday, February 3, 2010

நானும் நீயும்


"நானும் நீயும்"



குடிநீரை வீணாக்காதிர்கள்

என்ற வாசககத்தோடு

குடிநீரை சிந்தியபடி குடிநீர் லாரி!



புகயிலை உடல் நலத்திர்க்கு கேடு

என்ற வாசககத்தோடு

புகயிலைப் பெட்டி!



இறைவன் என்னுள் இருக்கிறான்

என்ற வாசககத்தோடு

உள்ளிருக்கும் போலி சாமியார்.


நீ என்னுள் இல்லை

என்ற வாசகத்தோடு

நான்.


இந்த வாசகம் உனக்கு புரிந்தாலும்

புரியாத மாதிரி

நீ!!!!!!!!!!!!!


- சுகந்தன்

Thursday, December 31, 2009



இன்று இந்த வருடத்தின் கடைசி நாள்
வருடம் தொடங்கியதுமுதல் இன்று வரை
பரிமாறிய வார்த்தைகள், வாதங்கள்
அளவிடமுடியாத வானமாய்,
சேர்ந்த காதல்கள் மலர்ந்த பூக்களாய்,
மனத்தில் புதைந்த காதல்கள் மலராத மொட்டாய்
இந்த வருடத்தில் அதிகமான நேரத்தை செலவிட்ட
அலுவலகத்தில் உள்ள அனைத்து நண்பர்களுக்கும்
இந்த சந்தோஷமானவாழ்க்கைக்கு நன்றி சொல்லி
மனதில் நினைத்துப்பார்க்கவேண்டிய நன்னாள்
வாழ்க தமிழ் வாழ்க நீயும்!

சுகந்தன்

Thursday, December 24, 2009